சிலியில் பாரிய பூகம்பம்: 8.8 Magnitude பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில்  ரி்க்டர் அளவுகோளில் 8.8 புள்ளிகளாகப் பதிவான பரிய நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது.

இதுவரை (27 பெப்: 10.12 AM) சிலியில் 88 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிர்ப் பலி மிக அதிகமாக இருக்கும் என்று சிலியின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி முழுவதும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுவிட்டதால் சர்வதேச விமான நிலையம் உள்பட சிலியின் பெரும்பாலான விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

1.5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவாகி தென் அமெரிக்காவுக்கு வடக்கிலும் தெற்கிலுமாக மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது. முதலாவது அலை ஹவாய் தீவுகளை உள்ளுர் நேரப்படி 12.46 AM க்கு தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பசிபி்க் பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரம், மேலும் சிலிக்கு அருகே உள்ள கொலம்பியா, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் ஹவாய் தீவுகள், அத்தோடு அண்டார்டிகாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1900ம் ஆண்டுக்குப் பின் உருவான மிகப் பெரிய பூகம்பங்களில் 5வது பூகம்பம் இது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பல உயிர்கள் காக்கப்படவேண்டும் என்று பிரார்திப்போம்

Comments

Popular posts from this blog

911 ணும் 5 வயது Savannah வும்