அமெரிக்கா மற்றும் கனடாவில் விபத்து மற்றும் பொலிஸ் அவசர அழைப்புக்கு 911 என்ற இலக்கம் பயன்படுதப்படுகின்றது. கீழே நீங்கள் பார்க்கும் வீடியோவில் பாருங்கள் அந்த 5 வயது Savannah வின் அனுபவமான அட்டகாசத்தை.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு பொருட்களை அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்
சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது? எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள். மதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது. காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்...
தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் ரி்க்டர் அளவுகோளில் 8.8 புள்ளிகளாகப் பதிவான பரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது. இதுவரை (27 பெப்: 10.12 AM) சிலியில் 88 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிர்ப் பலி மிக அதிகமாக இருக்கும் என்று சிலியின் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி முழுவதும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுவிட்டதால் சர்வதேச விமான நிலையம் உள்பட சிலியின் பெரும்பாலான விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 1.5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவாகி தென் அமெரிக்காவுக்கு வடக்கிலும் தெற்கிலுமாக...
Adorable!
ReplyDeleteReally amazing...!
ReplyDelete