அமெரிக்கா மற்றும் கனடாவில் விபத்து மற்றும் பொலிஸ் அவசர அழைப்புக்கு 911 என்ற இலக்கம் பயன்படுதப்படுகின்றது. கீழே நீங்கள் பார்க்கும் வீடியோவில் பாருங்கள் அந்த 5 வயது Savannah வின் அனுபவமான அட்டகாசத்தை.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு பொருட்களை அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்
விஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith
சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது? எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள். மதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது. காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்...
Adorable!
ReplyDeleteReally amazing...!
ReplyDelete